கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
சங்கக்காரவுக்கு விஸ்டனின் இரண்டு உயர் விருதுகள்!
புகழ்பெற்ற விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையினால் 2011ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவ்வருடத்தின் உலகின் முன்னிலை கிரிக்கெட் வீரராகவும் இலங்கை வீரர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை இத்தெரிவுகள் அறிவிக்கப்பட்டன. 34 வயதான குமார் சங்கக்கார கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் 2267 ஓட்டங்களைக் குவித்தார். அவர் உலகத் தரம் வாய்ந்த விக்கெட் காப்பாளராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையானது 1864 ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. 1889 ம் ஆண்டு முதல் அச்சஞ்சிகையின் ஆசிரியரினால் வருடத்தின் 5 சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனர். 2004ம் ஆண்டிலிருந்து உலகின் முன்னிலை வீரருக்கான விருதும் வழங்கப்படு கிறது. இவ்விரு விருதுகளையும் ஒரே தடவையில் வென்ற முதலாவது வீரர் குமார் சங்கக்கார ஆவார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |