கர வருடம் பங்குனி மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஜ.அவ்வல் பிறை 16
SUNDAY APRIL 08, 2012

Print

 
பத்துக் கடவுச்சீட்டுக்களுடன் கைதான கிளிநொச்சி இளைஞன்

பத்துக் கடவுச்சீட்டுக்களுடன் கைதான கிளிநொச்சி இளைஞன்

இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு

கிளிநொச்சியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரை, பத்து கடவுச் சீட்டுக்களுடன் சிலாபம் நகரில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக் கூறி,

பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கடவுச்சீட்டுக்களும் ஜெர்மன் நாட்டிற்கான ஐந்து விமான பயணச் சீட்டுக்களும் கைப்பற்றப் பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]