பத்துக் கடவுச்சீட்டுக்களுடன் கைதான கிளிநொச்சி இளைஞன்
பத்துக் கடவுச்சீட்டுக்களுடன்
கைதான கிளிநொச்சி இளைஞன்
இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு
கிளிநொச்சியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரை, பத்து கடவுச் சீட்டுக்களுடன் சிலாபம்
நகரில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண
தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டு தொழில்
வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக் கூறி,
பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கடவுச்சீட்டுக்களும் ஜெர்மன்
நாட்டிற்கான ஐந்து விமான பயணச் சீட்டுக்களும் கைப்பற்றப் பட்டதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் குறிப்பிட்டார்.
கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன
தெரிவித்துள்ளார்.