புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
வெளிநாட்டுச் சக்திகளின் ஆக்கிரமிப்புக்களின் போது சிங்கள மக்களின் பக்கம் நின்றவர்கள் முஸ்லிம்கள்

இலங்கையின் சுதந்திரம், பயங்கரவாதத்திலிருந்து நாடு மீட்பு:

வெளிநாட்டுச் சக்திகளின் ஆக்கிரமிப்புக்களின் போது சிங்கள மக்களின் பக்கம் நின்றவர்கள் முஸ்லிம்கள்

அன்பும், ஆதரவும் வழங்கும் சமூகம் என ஜனாதிபதி மஹிந்த பாராட்டு

வெளிநாட்டு ஏகாதிபத்திய வாதி களின் ஆக்கிரமிப்புக்க ளின் போது முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் பக்கம் நின்று ஆதரவு நல்கியுள்ளனர். இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த போதும் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்புச் செய்தனர். அதேபோன்று பயங்கரவாத த்திலிருந்து நாட்டை மீட்க மேற்கொண்ட நடவடிக்கை களிலும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு எமக்கு மிகுந்த பலமாக அமைந்தது.

வரலாற்றுக் காலத்திலிருந்து முஸ்லிம் மக்கள் இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளமை இந்த நாட்டின் மீது அவர்கள் முழுமையான அன்பைச் செலுத்தி யதால் தான் உலகில் சிலர் இத்தகைய மக்களை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஒன்றாக வாழ அவர்களுக்கு விருப்பமில்லை.

சில நாடுகள் இனங்களைப் பிரித்து நாடுகளைப் பிரித்து பகைமையை ஏற்படுத்த முயற்சி க்கின்றன. இதனை நன்கு இனங் கண்டு உணர்ந்து நாம் ஒற்று மையாகவும் ஐக்கியமா கவும் சமாதா னமாகவும் எம்மால் வாழ முடிகின்றது. நுவ ரெலியா அல் கபீர் ஜும்ஆப்பள்ளி வாசலைத் திறந்து வைத்து உரையாற் றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- இனங்களைப் பிரித்து நாட்டைப் பிளவுபடுத்திப் பகை மையை வளர்ப்பதற்குச் சில உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

ஆயினும் அவற்றை வெற்றிகரமாக முறியடித்துச் சகல இன மக்களும் ஐக்கியமாக வாழும் இலங்கையை எம்மால் கட்டியெழுப்ப முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையைப் பொறுத்தவரை மிக நீண்டகாலங்களாக சிங்கள - தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்துள்ளனர். மலை நாட்டை ஆட்சி செய்த மன்னர்களும் முஸ்லிம் மக்களுக்கு விசேட வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளனர். அவர்களை மலை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் குடியமர்த்தியுள்ளனர். இதனை நாம் வரலாற்றில் பார்க்க முடிகிறது.

பெளத்த சமயத்தில் புத்த பகவான் மிருகங்களுக்கிடையில் பேதங்கள் வேறுபாடுகள் நிலவினாலும் மனிதர்களுக்கிடையில் பேதங்கள் இருக்கக் கூடாது என்பதைப் போதித்துள்ளார். இதன் மூலம் எங்கே பிறந்தாலும் மனிதர்கள் மனிதர்கள் தான் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணத்தாலேயே எமது நாட்டிலும் சகல இன மத மக்களும் ஐக்கியமாக ஒன்றிணைந்து வாழ வழிசமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.