கவர்ச்சியாக நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன், என்று நடிகை இனியா அதிரடியாக
கூறியுள்ளார். நடிகர் விமல் ஜோடியாக வாகை சு+டவா படத்தில் கிராமத்துப் பெண்ணாகவும்,
நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக மௌன குரு படத்தில் மாடர்ன் பெண்ணாகவும் நடித்து
ரசிகர்களின் மனதோடு ஒட்டிக் கொண்டவர் நடிகை இனியா.
இவர் தற்போது டைரக்டர் பாரதிராஜh
இயக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்
அம்மணிக்கு கிராமத்துப் பெண் கேரக்டர்தான்.
அடுத்தடுத்து கிராமத்துக் கதையம்ச படங்களில் நடிப்பதால் தனக்கு எந்த வருத்தமும்
இல்லை என்று கூறும் இனியா, தான் கவர்ச்சிக்கு எதிரி இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபத்தில் கவர்ச்சி உடைகளில் வெளியான
என்னுடைய புகைப்படங்களை பார்த்து நிறைய பேர் இனியா கவர்ச்சி வேடத்திற்கு
தயாராகிவிட்டார் என கூறுகின்றனர்.
ஒரே மாதிரியான கிராமத்து கதாபாத்திரத்தில்
நடிப்பதால் மக்களுக்கு அது சீக்கிரமாகவே போராடித்துவிடும். மேலும் அதுமாதிரியான
கதாபாத்திரத்தில் நடிப்பதால் நான் கிளாமருக்கு எதிரியும் அல்ல. கதைக்கு கிளாமர்
தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும் நான் தயார், என்று
கூறியுள்ளார்.