மேகக் கூட்டம் தாண்டியே
அதி விரைவாய் மறையுதே
தூர நாடு நோக்கியே
வேகமாக செல்லுதே
சாமான் ஏற்றிச் செல்லுமே
மக்களையும் சுமக்குமே
தூர தேசம் அனைத்திற்கும்
பறந்து சென்று திரும்புமே
உலகப் பறவை போலவே
உயரத்திலே பறக்குமே
குட்டிக் கரணம் அடிக்குமே
வானில் விந்தை காட்டுமே
கொஞ்ச நேரம் பறந்தது
நீண்ட தூரம் செல்லுமே
விரைவாய் நாடு மீண்டிடும்
உலோகப் பறவை விமானமே!
- விடத்தல்தீவு இன்ஹாம்
திருக்குறள்
திருவள்ளுவரால் எழுதப்பட்ட ஒரு சிறந்த நூல் திருக்குறள். இது அறத்துப் பால், பொருட்
பால், காமத்துப் பால் என பிரிவுகளைக் கொண்டது.
மொத்தமாக 133 அதிகாரங்களைக் கொண்ட இந்நூலை பொய்யா மொழி, பொது மறை, தமிழ் மறை எனப்
பல பெயர்களைக் கொண்டுள்ளது.
திருக்குறள் நாடு, மொழி, மதம், இன வேறுபாடின்றி அனைவரும் ஆவலோடு படிக்கத்தக்க ஒரு
நூலாகும். ஆகவே இது உலகப் பொது நூலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் என பல மொழிகளில் இதுமொழி
பெயர்க்கப்பட்டுள்ளது.
எம். என். ரிஸ்கி
தரம் - 7, மா/ ஸாஹிரா தே. பா.
மாத்தளை.
'ெஜட்'-
உருவாக்கும் மேகங்கள்!
ஜெட் விமானங்கள் பறக்கும் போது, அதன் பின்புறத்தில் வெள்ளை நிறக் கோடுகளைப்
பார்த்து இருப்பீர்கள். இதை புகை என்று நினைத்தால் அது தவறு.
ஜெட் எஞ்ஜின் உள்ளே எரிபொருள் எரியும் போது, அதில் அடங்கி இருக்கும் றைட்ரஜனும்,
காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் சேர்ந்து, நீராவியாக மாறுகிறது. நீராவி
வெளியேற்றப்படுவதுதான் நமக்கு வெள்ளைப் பட்டையாக கோடு வடிவத்தில் தெரிகிறது. சில
சமயம் இந்த நீராவி வெளியாகும் பகுதியில் காற்று ஈரப்பதத்துடன் இருந்தால் நீண்ட
நேரத்திற்கு இந்தக் கோடு மறையாமல் இருக்கும்.