கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25
SUNDAY MARCH 18, 2012

Print

 
புரவலர் பூங்காவில் அமீர் அலியின் நூல் இன்று கொழும்பில் வெளியீட்டு விழா

புரவலர் பூங்காவில் அமீர் அலியின் நூல் இன்று கொழும்பில் வெளியீட்டு விழா

எழுத்தாளர்களுக்கு கரம் கொடுத்து இன்பத் தமிழ் வளர்க்கும் புரவலர் புத்தகப் பூங்காவின் 28வது மலர் இன்று 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

கவிஞர் கிண்ணியா அமீர் அலியின் ‘மனையாளும் மறுபதிப்பும்’ எனும் கவி தைத் தொகுப்பு நூலே புரவலர் பூங்காவின் 28வது வெளியீடாகும்.

பூங்காவின் நிறுவனர் புரவலர் ஹாஷிம் உமர் முன்னிலையில் ஆர். பாரதியின் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் இவ்வெளியீட்டு விழா நடைபெறும்.

கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர்கனி வர வேற்புரையும், கவிஞர் கனிவு மதி நய உரையும், மெளலவி முபாரக் ஏ. மஜீத் நன்றியுரையும், நூலாசிரியர் ஏற்புரையும் வழங்கும் இவ்வெளியீட்டு விழா நிகழ்ச்சி களை ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். நவாஸ் தொகுத்து வழங்குவார். சமய சமூகப் பிர முகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பைந்தமிழ்ப் பற்றாளர்கள் உட்பட பெருந் தொகையானோர் கலந்து சிறப்பிக்கவிருக்கும் 28வது நூல் வெளியீட்டு விழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள தாக விழா அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]