கேள்வி: சகியே! உன்னோடு கொஞ்ச நேரம் பேச ஆசை. இதற்கு பலியானது என் நரை மீசை. ஒரு
கவிஞன் இப்படி ஏடாகூடமான ஒரு கவிதையைக் கேட்டால் உங்கள் பதில் கவிதை எப்படி
இருக்கும்?
பதில்: பேச நினைத்ததற்கே நரைத்தது மீசை. ஆசை வைத்திருந்தால் கிடைத்திருக்கும்
.......... பூசை......
(ஏன் இந்த ‘கொலைவெறி’ ஓசை சுட்டுத்தரவா சூடாக ஒரு தோசை?)
கேள்: தென்றலுக்குள் நீங்கள் புயலைக் கிளப்பிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்களே!
உண்மையா?
பதில்: தென்றலுக்குள் புயலா? தென்றல் தான் புயலானது......
(அப்போ அடுத்து சுனாமியோ....?)
கேள்: வானொலிக்கும் வயல் வெளிக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: வானொலியில் - தென்றல் பேசும் வயல் வெளியில் - தென்றல் வீசும்.
(பதிலைச் சொன்னால் கண்கள் கூசும்)
கேள்: காதலில் சொதப்பிய அனுபவம் உண்டா?
பதில்: நான் என்ன சித்தார்த்தா?
(அப்போ சித்தார்த்துக்கு மட்டும்தான் காதல் வருமோ?)
கேள்: வானொலியில் உங்கள் குரலைக் கேட்டு விட்டு மயங்கிப் போய் நேரில் வந்து உங்களைப்
பார்த்த பிறகு யாராவது மயங்கி விழுந்துள்ளார்களா?
பதில்: மயக்கத்தின் பின்பும் மயக்கமா?
(அந்த அதிர்ச்சி இன்னும் தெளியவில்லை போலிருக்கிறதே.....!)
கேள்: எந்த அறிவிப்பாளரைப் பார்த்தால் ‘ஐயோ பாவம்’ என்று உங்களுக்கு’ சொல்லத்
தோன்றும்?
பதில்: என்னைத் தான்..... உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேனே....
(சுத்தம்.......)
கேள்: காதலில் அதிகம் சொதப்புவது ஆண்களா? பெண்களா?
பதில்: காதல் சொதப்பல் என்றால்..... சொதப்புவது ஆணும் பெண்ணும்தான்.
(அடா.... என்ன கண்டுபிடிப்பு..... நீங்கள் இங்கே இருக்க வேண்டியவர் அல்ல!)
கேள்: நீங்கள் கவிதை எழுதும் போது உங்களுக்கு கற்பனை ஊற்றெடுக்குமா? அல்லது மு.
மேத்தாவின் கவிதை நூல்கள் பக்கத்தில் இருந்து உதவி செய்யுமா?
பதில்: ஊற்றெடுத்தால் மூழ்கிடுவேன். கற்பனை வரும், உதவிட பேனா... மை தரும்... அப்போ
கவிதை... வரும்
(பொய் சொல்லக் கூடாது பாப்பா.....!)
கேள்: உங்கள் குரல் குயிலைப் போல் இருக்கும் என்று சொல்லுகிறார்களே. அதாவது ‘கூஊ’...
கூஊ... கூஊ.’ என்று மட்டும் தான் பாடுவீர்களாமே உண்மையா?
பதில்: கூஊ.... கூஊ.... என்று குயிலைப் பார்த்து கூவியது உண்டு. கூவும் குயிலுக்குப்
பாடத் தெரியாததால் ஹைகூ பாடியதுண்டு.
(அப்போ... உங்க தோழி சொன்னது சரிதானே....)
கேள்: உங்களுக்கு கோபம் வந்தால் பக்கத்தில் யார் இருந்தாலும் அவர் மூக்கைக் கடித்து
விடுவீர்களாமே! அப்படியா?
பதில்: கோபத்துக்கு ஏன் மூக்கின் மேல் கோபம், மூக்கு அது பாவம்...