கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18
SUNDAY MARCH 11, 2012

Print

 
நாட்டைக் காப்பாற்ற சகல முஸ்லிம்களும் ஒத்துழைப்பு

இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை;

நாட்டைக் காப்பாற்ற சகல முஸ்லிம்களும் ஒத்துழைப்பு

சபையில் அஸ்வர் ணி.ஜி பாராட்டு

வெளிநாட்டு சதிகாரர்களுடைய சதித்திட்டத் திலிருந்து எமது நாட்டை காப்பாற்றுவதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கை காலத்தைப் பொறுத்து மிக்க முக்கியத்துவம் பெறுகின்றது என அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. பாராளுமன்றத்தில் கூறினார்.

சென்ற வியாழக்கிழமை சபை ஒத்திவைப்பு நேரத்தின் விவாதத்தின் போது கலந்து கொண்டு பேசிய அல்ஹாஜ் அஸ்வர் எம். பி., நாட்டுப்பற்றுள்ள முஸ்லிம்கள் அனைவரும் எமது தாய் நாட்டை காப்பாற்றுவதற்கு பள்ளி வாசல்களில் தோறும் விசேட துஆப் பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும் என்றும் மேலும் கூறினார். காதி நீதிமன்றங்க ளின் தரத்தை உயர்த்துவதற்கும் நீதிபரிபாலனங்கள் என்ற முறையில் அவர்களுக்கு அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு மேலும் அவர்களின் நீதி நிர்வாகத்துக்கு ஏற்ப மேலும் பல வசதிகளைச் செய்து கொடுக்கவும் ஒரு பிரேரணையையும் சபையில் முன்வைத்து நீண்ட உரை நிகழ்த்தினார்.

பிரேரணையை சபை ஏற்றுக்கொ ண்டது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]