இலங்கைக் கட்டிடக்கலைஞர்கள் நிறுவகத்தின் (ஷிழியிதி) ஆண்டுப் பொதுக் கூட்டம்
பெப்ரவரி 25ஆம் திகதி அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
இடம்பெற்றது. ஷிழியிதி யின் 30ஆவது வருடாந்த திrணீhitலீணீt 2012 நிகழ்வுகளில்
முக்கிய அங்கங்களில் ஒன்றாக இந்த ஆண்டுப் பொதுக் கூட்டம் விளங்குகின்றது.
‘இலங்கையை மீள உருவாக்குதல்- கட்டிடங்கள் அமைந்த சூழலில் கட்டிடக் கலைஞனின்
பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் திrணீhitலீணீt 2012 நிகழ்வுகள்
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்கைக் கருத்தில்
கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன. இதன்போது ஷிழியிதி யின் கவுன்ஸிலுக்கு 7
அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் அங்கத்தவர்களும்
தொழிற்துறையும் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் ஷிழியிதி யின் எதிர்காலத்திட்டங்கள்
தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக் கட்டிடக் கலைஞர்கள் நிறுவகம் 1957 இல் உருவாக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டின்
பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கட்டிடக் கலைஞர்கள் அங்கம் வகிக்கும்
உத்தியோகபூர்வ அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது.