கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18
SUNDAY MARCH 11, 2012

Print

 
எலிபண்ட் ஹவுஸ் - கிக் கோலா அனுசரணையில்

எலிபண்ட் ஹவுஸ் - கிக் கோலா அனுசரணையில் விறுவிறுப்பான மும்முனை விளையாட்டுப் போட்டி

இலங்கையில் முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட, மும்முனை விளையாட்டுப் போட்டி 2012 அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டி அதிக பார்வையாளர்களைக் கொண்ட விறுவிறுப்பான போட்டியாக அமைந்திருந்ததுடன் 35 நாடுகளைச் சார்ந்த 400க்கும் மேற்பட்ட வீர விராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில் கொழும்பு நகர மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களின் பெரும் விருப்பத்தினைப் பெற்ற விற்பனைச் சின்னமான எலிபன்ட் ஹவுஸ் மற்றும் இக் கோலா ஒன்றிணைந்து இம் மும்முனைப் போட்டிக்கு அனுசரணையை வழங்கி விறுவிறுப்பூட்டும் சக்திமிக்க தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன. எலிபன்ட் ஹவுஸ் இவ்வாறான விளையாட்டு முன்னெடுப்புகளுக்கு வர்த்தகத்துறைக்கான தமது ஒத்துழைப்பினை கடந்த சில தசாப்தங்களாகத் தொடர்ந்தும் வழங்கி வருவதில் முன்னணியில் திகழ்கின்றது.

“இது இலங்கையில் விளையாட்டுடன் இணைந்து சுற்றுலாதுறை செயற்பாடுகளை மேம்படுத்தும் எதிர்பார்ப்பைக் கொண்ட குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டமாகும். இவ்வாறான விடயங்களில் ஒன்றிணைவதில் உண்மையில் நாம் பெருமையடைகிறோம்.” என எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தின் குளிர்பதனப் பிரிவுத் தலைவர் நீல் சமரசிங்க தெரிவித்தார். இந் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் கொழும்பு பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஜித் விக்கிரமசிங்க, ஃபரிக் காதர், எலிபன்ட் ஹவுஸ் குளிர்பான மற்றும் குளிர்பதனப் பிரிவுத் தலைவர் நீல் சமரசிங்க, இலங்கை விளையாட்டு சம்மேளனத்தின் துணைத் தலைவர் பிரேமா பின்னவல மற்றும் போட்டிப் பணிப்பாளர் ஷனாத் குரக் ஆகியோர் புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]