கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகியது. நவநாள் ஆராதனை மற்றும் விசேட மறையுரைகளும் இடம்பெற்றன.
இன்று ஞாயிறு காலை திருவிழா, திருப்பலி பூஜைகள் நிகழவிருக் கின்றன.
இலங்கையிலும் இந்தியா விலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
சிறப்பிக்கும் இப்பெரு விழா இன்று நிறைவு பெறுகிறது.
இலங்கைக்கும் இந்தியா வுக் கும் இடையிலான நல்லுறவை மென்மேலும் வலுப்படுத்தும்
வகையில் வருடா வருடம் இத்திருவிழாவை ஒழுங்கு செய்து வருவது குறிப்பிடத் தக்கது.