“தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் அனைத்து
பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்படும்.”
2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை
மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களும் எந்தவித பாகுபாடின்றி சரிசமமாக அபிவிருத்தி
செய்யப்படும் என தொலைத்தொடர்பு அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் பாகுபாடின்றி இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப் பிட்டார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சி
அம் பாறையில் நடைபெறவுள்ள இடங்களை பார்வையிட்ட பின்னர், மகாஓயா பிரதேச சபையில்
இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேற்கண்டவாறு
குறிப் பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயா, அரங்குவ மற்றும் அரந்த லாவ ஆகிய பிரதேசங்கள்
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்துவதற்காக தெரிவு செய்யப் பட்டுள்ளன.
இந்தப் பிரதேசங்களுக்கு தொலைத்தொடர்பு அமை ச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய, நீதி
அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸின் தலைவரு மான ரவூப் ஹக்கீமின் இணை ப்புச்
செயலாளர் ரஹ்மத் மன்சூர் மற்றும் முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என பலர்
அண்மையில் விஜய மொன்றை மேற்கொண்டு பார்வையிட்டனர்.