அரசாங்கத்தின் புறக்கணிப்புகள் தொடரின் ஆதரவை விலக்கல்!
அரசாங்கத்தின் புறக்கணிப்புகள் தொடரின் ஆதரவை விலக்கல்!
எச்சரிக்கிறார் திகாம்பரம் ணிஜி
மலையக அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்தும் அரசு புறக்கணிக்குமாயின், தாம் அரசில்
இருந்து விலக நேரிடும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப. திகாம்பரம்
தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுகங கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
முன்மொழிந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசு அதிக முன்னுரிமை வழங்குவதாகவும்,
தமது தொழிலாளர் தேசிய சங்கம் முன்வைக்கும் செயற்திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை
வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.