சிறுத்தை திரைப்படத்திற்கு பிறகு கார்த்தியுடன், சந்தானம் மூன்று திரைப்படங்களில்
நடிக்கிறார்.
கொலிவுட்டின் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் ரசிகர்களை சிரிக்க
வைக்கும் சந்தானம்,கார்த்தியுடன் மூன்று படங்களில் நடிப்பதை பற்றி பேசியுள்ளார்.
நான் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கும் நீ தானே பொன் வசந்தம் படம், சுந்தர்.சி
இயக்கும் மசாலா க/பே, சு+ர்யாவின் நடிப்பில் இயக்குனர் ஹரியின் படம் என்று
நடிக்கப்போகிறேன்.
இதில் 'சிறுத்தை' படத்துக்கு பிறகு, கார்த்தியுடன் நான் மூன்று படங்களில் இணைகிறேன்.
விரைவில் வெளியாக உள்ள சகுனி, சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும்
அலெக்ஸ் பாண்டியன், கார்த்தியை வைத்து பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராNஜஷ்
இயக்கும் படம் என்று நான்கு படங்களில் நானும் கார்த்தியும் கூட்டணி போட்டு
கொலிவுட்டை கலக்கப்போகிறோம் என்று சந்தானம் கூறியுள்ளார்.