கேள்வி : உங்கள் கவிதையோடு விளையாடிப் பார்க்க எனக்கு ஆசை. எடுத்து விடுங்களேன்
இரண்டு வரிகள். துடிக்க மீசை.
பதில்: பார்வையில் தந்தால் சங்கமம் இது பாமழை நாளும் சிந்தும்.
(இதைக் கேட்டு துடிக்கவில்லை மீசை வீணாகிப் போய்விட்டது என் ஆசை)
கேள்வி : நீங்கள் கவிதை எழுதும் போது பக்கத்தில் ஒரு காரிகையும் இருப்பதாகச்
சொல்லுகிறார்களே! உண்மையா?
பதில்: உண்மை – நான் கவிதை எழுத அமர்கின்ற மேசையின் மீது பல புத்தகங்களும் தாள்களும்
இருக்கும் அப்படி உள்ள புத்தகத்தில் ஒன்றுதான் நீங்கள் கூறிப்பிட்ட காரிகை
‘யாப்பலங்கார காரிகை’
(‘காரிருள்’ தான் இருக்கும் என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
ஏமாற்றுவிட்டிரே கவிஞரே)
கேள்வி : உப்பு சப்பில்லாத கவிதைகளைப் படிக்கும் போது அதை எழுதியவர்களின் முகத்தில்
அப்பு அப்பென்று அப்ப வேண்டும் போல் உங்களுக்குத் தோன்றுகிறதா?
பதில்: இல்லை – இப்படி கேள்வி கேட்கின்ற உங்களை தான் நாலு அப்பத் தோன்றுகிறது.
(அடடா! இனம் இனத்தோடு சேர்கிறது போல் தெரிகிறதே.....!)
கேள்வி : ஏ ஆணே! இங்கே வராதே அடிக்கடி! ஏற்கனவே, கையில் குழந்தையுடன் இங்கே பலர்!
இப்படி ஒரு பெண் உங்களிடம் சொன்னால் உங்கள் பதில் கவிதை எப்படி இருக்கும்?
பதில்: நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிaர்கள் என்ற சொல்வேன்
(ஓ... இப்படியும் பதில்??? கவிதை இருக்கிறதா????)
கேள்வி : ஏடாகூடமாக இரண்டு வரிகளில் ஒரு கவிதையை எடுத்து விடுங்களேன் பார்ப்போம்.
பதில்: ஆடையில் விழுந்த அழுக்கல்ல - காதல் அலசியவுடன் போவதற்கு ஓடையில் ஓடும்
நீரல்ல - காதல் கோடையில் வற்றிப்போவதற்கு
(கூடையில் நிறைய இருக்கிறது போல் - கேட்டதும் எடுத்து விடுவதற்கு!)
கேள்வி : ஒரு கவிஞனுக்கும் கலைஞனுக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: ஒரு எழுத்து மட்டுமே கவிஞனுக்கு ‘வி’ வருகிறது கலைஞனுக்கு ‘லை’ வருகின்றது
ஓர் எழுத்தின் இடமாற்றம் சொல்லின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது – இதுதான் தமிழின்
தனித்துவம். கவிஞன் / கலைஞன்
(நான் வேறு பதிலை அல்லவா எதிர்பார்த்தேன்)
கேள்வி : 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடை எது?
பதில்: ‘சாக்கடை’
(4வது கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘கோட்டை’ விட்டு விட்டு இதற்கு மட்டும் பதில்
சொன்னால் எப்படி?)
கேள்வி : உங்களை கவிஞனாக்கிய கல்லூரி எது?
பதில்: வாழ்க்கை - அது தந்த மேடு பள்ளமான வருத்தங்களும் வசந்தங்களும். அதில்
மலர்ந்த அனுபவங்கள என் கவிதை.
(ம்.... இருக்கட்டும்... இருக்கட்டும்)
கேள்வி : உங்களுக்கு காதல் கவிதை பிடிக்குமா? கூதல் கவிதை பிடிக்குமா? அல்லது மோதல்
கவிதை பிடிக்குமா?
பதில்: இவை எல்லாவற்றையும் விட மக்கள் எழுச்சி கவிதைகளே என்னை அதிகம் நேசிக்க
வைக்கிறது. தேனாலும் பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது -
பட்டுக்கோட்டை
(பட்டுக்கோட்டையாக விடமாட்டீர்கள் போலும்)
கேள்வி : காதலிக்கு கவிதை மூலம் ‘அல்வா’ கொடுத்த அனுபவம் உண்டா?
பதில்: கவிதை மூலம் ‘அல்வா’ கொடுப்பது எப்படி என்று உங்கள் அனுபவத்தை சொன்னால்
கேட்டுக்கொள்கிறேன் - நீங்கள் தான் ‘அல்வா’ மன்னன் ஆயிட்டே.
(4வது கேள்வியில் உள்ள கவிதையை படித்து விட்டு இந்த கவிதையை படியுங்கள்.
ஏ... பெண்ணே
அடிக்கடி சிரிக்காதே
தாடியுடன்
ஏற்கனவே
இங்கே பலர்!
(இந்தக் கவிஞரே கவிதையில் அல்வா கொடுப்பது என்பது)