கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
சர்வதேச விமான மற்றும் கப்பல் போக்குவரத்து கண்காட்சி 2012இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் EMS ஸ்ரீலங்கா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச விமான மற்றும் கப்பல் போக்குவரத்து தொடர்பான கண்காட்சி எதிர்வரும் 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியுடன் இணைந்த International Association of ports EC Harbours (IAPH) சுமார் 90 நாடுகளில் 230 துறைமுகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பின் பிராந்தியக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் புதிதாக துறைமுகங்கள், விமான நிலையங்கள் உருவாகி வரும் பின்னணியில் உற்பத்தி துறைகளில் துரித வளர்ச்சி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் இலங்கை துறைமுக அதிகார சபை(EMS Global USA உடன் இணைந்து இக்கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.
|
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |