கர வருடம் மாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
25 வருட பூர்த்தியை கொண்டாடும் நவஐீவனநவஜீவன என்பதன் அர்த்தம் ‘புதிய வாழ்க்கை’ விசேட தேவையுடையவர்களுக்கான அபிவிருத்தி மற்றும் சேவைகளை வழங்குவதில் 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளது நவஜீவன். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமான நவஜீவன, விசேட தேவையுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதனை நோக்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. வெள்ளி விழா ஆண்டில் தமது முயற்சிகளை தொடரும் வகையில், கொள்கை வகுப்பவர்கள் மத்தியில் மற்றும் குறிப்பிடத்தக்க பங்குதாரர்கள் மத்தியில் விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்ச்சியை அதிகரிப்பதில் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. மிக முக்கியமாக, புனர்வாழ்வு தொடர்பான நவஜீவனவின் சிறந்த பயிற்சிகள் விசேட தேவையுடைய நபர்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் உறவிற்கு நவஜீவன வசதியளிக்கும். நீண்ட கால நிதிப் பங்காளர்கள் மற்றும் அரசாங்கத்தினை அங்கீகரிக்கும் நவஜீவன பொது தனியார் பங்காளித்துவத்தின் மூலம் நிலைத்திருக்கும் தன்மையை உறுதி செய்கின்றது. நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை குறிக்கும் ஆரம்ப நிகழ்வானது மாற்றுத்திறனுடையவர்களுக்கு ஏதுவான வீதியை திறந்து வைத்தலுடன் ஆரம்பித்தது. இந்த பாதை நிர்மாணத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உதவி வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து விசேட தேவையுடையவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ள நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |