கலைச் சேவையில் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கலைஞர் கே. மோஹன்குமார் கலைப் பொய்கை
வைபவத்தில் கெளரவிக்கப்பட வுள்ளார்.
இன்று மருதானை டவர் மண்டபத்தில் கிருஷ்ண கலாலயம்
ஒழுங்கு செய்துள்ள கலைப் பொய்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேல் கலைச் சேவையில்
தன்னை அர்ப்பணித்த மோஹன் குமாரும் மற்றும் சக கலைஞர்களும் பாராட்டப்படவுள்ளனர்.
மலையாள மரபு வழியில் தோன்றினாலும் தமிழ் கலையார்வம் கொண்ட மோஹன்குமார் பரந்தளவில்
தமிழ் கலைஞர்களுடன் இணைந்து தன் பங்களிப்பை நல்கியுள்ளார்.
இன ஐக்கிய ஒருமைப்பாட்டிற்கு தேசிய கலைஞர்களின் ஒத்துழைப்போடு கதைவசன கர்த்தா,
இயக்குநர், நடிகர் என்று கலையுலகிற்கு வழங்கிய கதாபாத்திரங்களுக்கு களம் அமைத்துக்
கொடுத்தது அவர் 1970 அளவில் நிறுவிய கிருஷ்ண கலாலயம்.
1976ல் பிரதான பாத்திரமேற்று அவர் நடித்து மேடையேறிய ‘அக்னி பூக்கள்’ சிறந்த
நடிகராக அடையாளப்படுத்தியது. தொடர்ந்து இன்று வரை 200 நாடகங்களுக்கு மேல்
மேடையேறியிருக்கின்றார். தொலைக்காட்சி, சினிமா, வானொலிகளில் நடிப்பாற்றலையும், குரல்
வளத்தையும் வழங்கி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். 2009ல் சிறந்த நடிப்புக்கும்,
சிறந்த இயக்குநருக்குமான ‘முட்டை’ நாடகத்திற்கான இரட்டை விருதை பெற்றவர்.