சிகிச்சையை முடித்துக் கொண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வீடு திரும்பினார்.
கடந்த 1983ம் ஆண்டு கூலி படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சனுக்கு வயிற்றில்
அடிபட்டது.
இதன்காரணமாக அப்போது அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் அந்த காயம் வயிற்றில் நீண்ட
ஆண்டுகளாக இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து அடிக்கடி அவருக்கு ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக கடந்த 11ம்
திகதியன்று மும்பை செவென் ஹில்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது.
இருப்பினும் மீண்டும் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதால் இரண்டாவது அறுவை சிகிச்சை
செய்ய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை
என்று வைத்தியர்கள் முடிவெடுத்தனர்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து 12 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி இருந்தார்.
தற்போது, அவரின் உடல் நலம் நன்றாக இருக்கும் காரணத்தால் அவரை மருத்துவமனையிலிருந்து
வீட்டிற்கு அனுப்புவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.