கண்கள் விழித்துக் கவியெழுதிக்
கரத்தில் வைத்து விடுகின்றேன்
எண்கள் ஒன்று இரு சைபர்
என்றி ணைந்த ஒரு நோட்டுத்
தாளை யேனும் என்கையில்
தராது பெற்றுச் செல்கின்aர்
நாளைப் பொழுதும் நான் தேவை
நன்றி கூடச் சொலமாட்டீர்!
தாளுங் கோலும் நள்ளிரவு
தாண்டும் வரையும் எழுதுகின்றேன்
கூலி மட்டுங் கொடுக்காது
கொண்டு செல்ல வருகின்aர்!
தேவைப் பட்டால் நீரென்னைத்
தேடி வந்தே கேட்கின்aர்!
‘பா’வை எழுதித் தருகின்றேன்
பணியை மறந்தே போகின்aர்!
சும்மா செய்த காலத்தின்
சுவடே அழிந்து போச்சுதடா!
இம்மா நிலத்தில் இன்றைக்கு
எல்லாங் காசுக் காசுக்கே
இனியுஞ் சும்மா எழுதலாமா?
என்பே னாவும் என்தாளும்
கனியுங் கவிதை எழுதவெனின்
காசும் வேண்டும் மறவாதீர்!
நான் என்ன செய்வேன்....
- மருதமைந்தன் -
“பொய் சொல்லாதே”
போட்டடித்தேன் என் மகனை
உறுக்கி, அதட்டி
உதைத்தும் தள்ளினேன்,
தான் செய்த பிழையைத்
தங்கைமேல் சுமத்தியதால்
பொய் சொல்ல மாட்டேன்
சாகும்வரை, சத்தியம் செய்தான்
அரிச்சந்திரனாக,
நீண்டநாள் நிம்மதி.
கல்விப் படியில் கால்வைத்தவன்
தட்டுத் தடுமாறினான்,
வாணிபமும் காலை வாரிவிட்டது
வாழ்க்கை கசந்ததால்
அரசியலில் குதித்தான்
அவ்வளவுதான்...
இப்பொழுதெல்லாம்
மேடைக்கு மேடை
பொய்யையே கொட்டுகிறான்
அதுவும் பச்சைப் பொய்யை
பாகற்காய் போல
முட்டாள் சனங்களும்
விளக்கமின்மையால்
ஊக்குவிக்கின்றனர்
அசத்தலாகக் கைதட்டி,
ஆரவாரஞ் செய்து
அதனால் இப்போது
பொய்யை மட்டுமல்ல
புளுகவும் தொடங்கிவிட்டான்
நெஞ்சம் உடைந்து
நெருப்பாய்க் கனக்கிறது
பெற்ற பாவத்தை நினைத்து
நான் என்ன செய்வேன்...?
ஏற்புரை இல்லத்தரசி
- முத்தாலிப் -
புவனத்தின்
சத்திரத்தின்
பொறிகளின் ஆட்சியினை
சுவனத்து சோலைக்குள்
சிரம் நிமிர செல்லும்
பாதையினை இல்லறத்து
வாழ்க்கை நெறிகளை
சோதனையாக்கி சுபமாய்
ஜெயம் கொள்ள
கரம்பிடித்து தோள் பற்றிய
துணையவன் தோழியாய்
சிரம் பணிந்து சிறப்பின்
இம்மையின் இனியதொரு
இல்லத்தரசி நீயே!
வளம் பெற்ற புதுக்குடும்ப
ஆதனத்தின் பங்காளி நீ!
உளம் உணர்ந்து உறுதுணைக்கு
ஓம்புதலால் இம்மையின்
இல்லதரசி நீயே!
வாழ்வின் நீள் பயணத்தில்
வந்தமைந்தவன்
அரவணைப்பில்
தாழ்விலா வழித்துணைத்
தாரமானால் ஈரமான
இல்லதரசி நீயே!
தழல் அன்ன எரியும்
தரித்திர வெம்மை
வரட்சியில்
நிழலாய் வந்து நிற்பின்
இதந்தரும்
இல்லதரசி நீயே!
வல்லோன் வகுத்த இல்லற
செல் நெறியில்
இடர்கள் தடையாயின்
நல்லற ஆலோசனை
நாயகனுக்கு வழங்கும்
மதி மந்திரியும்
இல்லறத்து அரசியும் நீயே!
தாம்பத்திய வாழ்வில்
தலை முறை தாண்டும் வரை
தரணிப் பகட்டில்
ஏமாந்து போகாது ‘பதி’
இன்பம் பெறின்
இங்கிதமறிந்த
இல்லத்தரசி நீயே!
கைசேதம்!
- ஒலுவில் ஜலால்டீன் -
இளமையின் வெறியினாலே
ஈன்றவள் சொல்லுக்கேளா
துலகமே காத லென்று
தூர ஊர்ப் பெண்ணை நாடி
புலம் பெயர் அகதி போல
புகுந்தவன் வாழ்க்கை மாறி
கலகமே தினமுமாகி
கைசேதமானான் கேZர்!
காலையில் அவனெழுந்து
கண்ணகி எழும்புமென்றால்
பாலையில் வெந்த பாம்பாய்
பாய்ந்தவள் சீறியவனில்
வேலைக்குச் செல்லு முன்னே
விடியவொரு கலகம் செய்து
நாலையும் மறந்த பெண்ணாய்
நாய்க்குணம் கொண்டு நிற்பாள்!
குழந்தைகள் மீது பாய்ந்து
குற்றமும் குறையும் சொல்லி
அழுகையில் நாளும் மூழ்க
அவள் வெறி உச்சிக்கேறி
குளவியின் குத்துப்பட்ட
குரங்கினைப் போல நின்று
குழப்பமே உண்டுபண்ணி
குடிசையை நாசம் செய்வாள்!
இரவிலே அவளை நாடி
இரந்தவன் வேண்டி நின்றால்
முரசினை அடிப்பது போல்
முழங்கிய சத்தம் செய்து
இரகசிய விடயமெல்லாம்
எல்லோருமறியும் வண்ணம்
பரகசியமாக்கியவனை
பங்கமே செய்து நிற்பாள்!
இப்படிப் பெண்ணொருத்தி
இவனுக்கு வாய்த்ததாலே
தப்பினைச் செய்தவன் போல்
தலையிலே கையை வைத்து
அப்பன் தாய் சொல்லுக்கேளா
அற்பனாய் போனதாலே
இப்படி இழிநிலைக்குள்
இகழ்வுற்றதாக நொந்தான்!
பருவமழை பிழைத்தது
- தம்பிலுவில் ஜெகா -
வெயில் கொடுமையால் விவசாயி மனம்
வெந்து கருகி வெடிப்பதைப் பாரும்
பையில் இருந்த பணமெலாம் செலவிட்டும்
பயிரா லேதும் பலன் பெறவில்லை
மாரிமழை பெய்யவில்லை மனங்களில் மகிழ்வில்லை
மக்கள் முகங்களில் வாட்டங்குறையவில்லை
வாரி கண்டிடவும் வளமுடன் வாழ்ந்திடவும்
வைத்திருந்த கனவெல்லாம் வதங்கிப் போயின
இச்சையுடன் விதைத்து இரவெலாம் கண்விழித்து
இங்கிதமாய் பயிர் வளர்த்து இன்புற்றிருக்கையில்
பச்சையமின்றி வேளாண்மை சருகாய்க் கருகியது.
பசிதீர்க்கும் நெல் மணிகள் வீடுவந்து சேரவில்லை
வான்பார்த்த பூமியெலாம் விளைச்சல் குன்றியதால்
வளமிழந்த உழவர் தினம் கண்ணீர் வடிக்கின்றார்
ஏன் இந்தத் துன்பமெலாம் ஏர்பிடித்த உழவர்க்கு
ஏழ்மை நீங்கியவர் ஏற்றம்பெறும் நாளெது வோ?
மறவாதே: உயிரே!!!
- மு.ற. நுஸ்கிரியா -
உறவே
நான் உன்னை
நேசிக்க வில்லை....
என் உயிர் நீ யென
சுவாசிக்கிறேன்....
நிலவே!
மேக வேலிகளால்
உன்னை மறைத்து
ஏமாந்து போகாதே....
நான் வானம்,
நீ.....
எத்திசை நோக்கிலும்.....
என்னிலிருக்கும் உன்னை
ஆயிரம் நட்சத்திரம்
காவலர்கள்
ஒன்று சேர்ந்தாலும்
பிரித்தெடுக்கவே முடியாது!!!
சிறகு...
- கிண்ணியா அமீர் அலி -
சிறகு
முளைக்காத
சின்னஞ் சிறுகுஞ்சு
பறக்க முடியாமல்
பலாமரக் கிளையிருந்து
விழுந்து துடித்தது
வீதியில்....! தாய்க் ‘காகம்’
அழுது பறந்தது....!
பஸ்ஸின்
சில்லுக்குள் அகப்பட்டுச்
சிறு குஞ்சு சாகாமல்...
‘சாரதி’ நிதானித்தார்!
தப்பியது குஞ்சு!
சடுதியாய் வந்த ‘கார்’
சப்பியது! குஞ்சு....
சதை சின்னா பின்னமாய்...!
கண்களை மூடினேன்!
கண்ணீர்த் துளியிரண்டு....
என்னை யறியாமல்... மீறியது!
ஏனிது? ‘பாரதி’யின்
காக்கை, குருவி நம்
ஜாதி இது தானோ?
யாக்கை, உயிர் இம்
மனிதப் பிறவிக்குத்
தான் பெரிதா? காக்கைக்
குஞ்சு’க்காய் நானழுதேன்!
நாயைச் சுடுவதுபோல்
கண்முன்னால் மனிதரைக்
கொல்லும் மனிதர்கள்
வாழும் நமதிந்த
மண்ணில்.... இதற்கெல்லாம்
வீழும் கண் ணீர்த்துளி
வீண்தானோ....?
ஆனாலும் -
சிதறிச் செத்த
சின்னக் குஞ்சு
இன்னும்....
அழுது பறக்கிறதென்
கவிதை மனசுக்குள்....!
சிறகு இருந்திருந்தால் - அச்
சிறு குஞ்சு பறந்திருக்கும்!
நண்பர்களே!
நாமும் இப்படித்தான்!
சிறகு முளைத்தவர்கள்....
பறக்கிறார்கள்....!
சிறகை இழந்தவர்கள்
தவிக்கிறார்கள்....!
'தில்'
- கவிஞர் நிலதமிழின்தாசன் -
அன்னையைத் தந்தை மணந்ததில்
அன்பொடு வாழ்வினைத் துய்த்ததில்
என்னைக் கருவினிற் சுமந்ததில்
இருவரும் பெற்றே மகிழ்ந்ததில்