உலக வாழ் இந்துக்கள் நாளை மகா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களில் நாளை திங்களன்று மகா சிவராத்திரி விழா சிறப்பாகக்
கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்துசமய, கலாசார அலு வல்கள் திணைக்களம், கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர்
தேவஸ்தானத்தின் அனுசரணையுடன் சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு நாளை இரவு நான்கு ஜாமப் பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் என்பன
இடம்பெறவுள்ளன.
இதேவேளை இலங்கையின் பாடல்பெற்ற புனிதத் திருத்தலமான திருக்கேதீஸ்வரம் சென்று விரதம்
அனுஷ்டிக்கவுள்ள பக்தர்களின் வசதி கருதி மட்டக்களப்பு, கல்முனை, களுவாஞ்சிக்குடி,
அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய இடங்களில் இருந்து விசேட பஸ் சேவையை நடத்துமாறு
துறைநீலாவணை ஸ்ரீசக்தி விநாயகர் ஆலய அறங்காவல் சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.