ஹபுகஸ்தலாவை அல் மின்ஹாஜ் தேசியப் பாடசாலை யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி அண் மையில் இப்பாடசாலையின் புதிய முதல்வர்
ஏ.எச்.எம். ஜிப்ரியின் தலைமையில் பாட சாலை விளையாட்டு மைதானத் தில் நடைபெற்றது.
மேற்படி விழாவுக்கு பிரதம அதிதியாகக் கொத்மலை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி கமலா
ரத்நாயக்கவும் கெளரவ மற்றும் விஷேட அதிதிகளாக கொத்மலை வலய பிரதி, உதவிக்கல்விப்
பணிப்பாளர்கள், வலய ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பிளர்கள்,
பாடசாலை கல்வி அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர்கள், ஆசிரியர் கள்,
நலன்விரும்பிகள், உலமாக் கள், பள்ளி நிர்வாகிகள், பெற் றோர்கள் இவ்வாறு இறுதிநாள்
நிகழ்வுக்கு பலரும் வருகை தத்தனர்.
அத்துடன் புதிய அதிபரின் தலைமையில் சிறப்பாக நடை பெற்ற மெய்வல்லுனர் போட்டி யில்
பாடசாலை பேண்ட் வாத்திய குழுவினரும் மாணவர் களின் அணிவகுப்பு நிகழ்ச்சி யுடன்,
பாடசாலை உதைபந் தாட்டக் குழுவினர், கரப்பந்தாட்ட அணியினர், 2011ம் ஆண்டு ஐந்தாம்
ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 16 மாணவர்களும், சென் ஜோன்ஸ்
முதலுதவிக் குழுவினர் மாணவர் படையணியினர் ஆகியோர் பங்கேற்றனர்.