கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
தேர்தல் காலத்தில் மட்டும் அரசியல் நாடகம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை மறந்து செயற்படும் TNAU.K தமிழர் பேரவை கண்டனம் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை நாடும் அரசியல் போக்கை கடைப்பிடிப்பதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது. இதே குற்றச்சாட்டையே ஈ. பி. டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்திருந்தார். அவரை பின்பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது பிரித்தானிய தமிழர் பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தோடு செயற்படவில்லை என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |