கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய கோவில் தேர் திருவிழா

கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய கோவில் தேர் திருவிழா

கொழும்பு கொம்பனித்தெரு அருள் மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் இரதோற்சவம் நாளை திங்கட்கிழமை (25.07.2011) காலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவ்வாலயத்தை ஸ்ரீ பொன்னம்பல முதலியார் 1867ம் ஆண்டு கட்டினார். இவ்வாலயம் முதலில் டாம் வீதியில் கட்டப்பட்டு 1894ம் ஆண்டு தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டு 1902ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் கொச்சிக்கடையில் பள்ளிகொண்டிருக்கும் பொன்னம்பலவானேஸ் வர ஆலய குருக்களே நித்திய பூசையை நடத்தி வந்தார்.

இரண்டாவது கும்பாபிஷேகம் 1979ம் ஆண்டு நடைபெற்றது.

தேர் திருவிழாவன்று முருகக் கடவுள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தேரில் வலம் வருவார். தேரைப் பக்தர்கள் கியூ வீதி, அக்பார் மாவத்தை, மலே வீதி, குமாரன் வீதி ரத்தினம் வீதி யூடாக நாதஸ்வர இசையோடு இழுத்துச் செல்லார்.

ஆகையினாலே தேர்த்திருவிழா விழாவில் அனைவரும் கலந்து அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமியைத் தரிசித்து அருள்பெற்று ஏகுமாறு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]