உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்துவதற்காக ஒப்பந்தம் கைச்சாத்து
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்துவதற்காக ஒப்பந்தம் கைச்சாத்து
வாச்சிக்குடா விN'ட நிருபர்
மட்டக்களப்பு சிவா னந்தா தேசிய பாட சாலை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய
பாடசாலைகளுக் கிடையிலான உதைபந் தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்துவதற்கான ஒப் பந்தம்
நேற்று(20) கைசாத் திடப்பட்டது.
அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அதிபர் எம்.கிருபை ராஜh தலைமையில்
ஆரம்பமான போட்டியை நடாத்துவதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்தையில் சிவானந்தா தேசிய
பாடசாலையின் அதிபர் க.மனோராஜ் தலைமையிலான குழுவினரும் இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின்
அதிபர் தலைமையிலான குழுவினரும் பங்கு பற்றினர்.
இரு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள் பங்கு கொள்ளும் "கிழக்கின் சமர்" என பெயர்
சூட்டப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் வெற்றிக்கிண்ணத்திற்கு "சிவராம" என
பெயரிடப்பட்டது.
15வயதிற்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் இப்போட்டியானது தொடராக 5வருடங்கள்
நடாத்தப்படும் எனவும் முதல் போட்டியானது செப்டம்பர் மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு
சிவானந்தா மைதானத்தில் நடைபெறும் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. மாணவர்களிடையே
நல் உறவையும், ஒற்றுமை யையும், புரிந்துணர்வையும் இவ்வாறான போட்டிகளினூடாக
வலுப்படுத்த முடி யும் என இதன்போது கருத்து வெளியிடப்பட்டது.