ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
ஐக்கிய தேசிய முன்னணியின்
தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
லக்ஷ்மி பரசுராமன்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கொழும்பு
விகாரமகாதேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
நாட்டில் நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேநேரம் பொரு ளாதாரத்தை
கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான குறிக்கோளாகும்.
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லாட்சி
குறித்து முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஐ. தே. மு. யின் தேர்தல்
விஞ்ஞாபனம் பதிலளிக்கு மென ஐ. தே. க. அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
‘உங்களுடைய பிரச்சினைக்கு எங்களு டைய தீர்வு’ என்ற தொனிப் பொருளில் இன்று கொழும்பு
விஹார மகாதேவி திறந்தவெளி அரங்கில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்
வெளியிட்டு வைக்கப் படுகிறது.
எதிர்கால இலக்கைக் கொண்ட ஐவகைத் திட்டங்கள்
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் இன்று நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.