ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை
THURSDAY, JULY 23 ,2015

Print

 
மஹிந்தவின் சுயரூபம் அம்பலம்

மஹிந்தவின் சுயரூபம் அம்பலம்

நிராயுதபாணியான சிவிலியன் ஒருவரை முன்னாள் ஜனாதிபதி தமது பாதுகாப்பு படையினர் புடை சூழ தாக்குதல் நடத்தியது ஒழுங்கீனமானது மட்டுமன்றி நாட்டின் சட்டத்தையும் மீறும் செயல் என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், எதிரான கருத்துக்களை ஏற்காத அரசியல் மஹிந்த ராஜக்ஷவுக்கே உரிய பண்பாகும். அகுறஸ்ஸ பகுதியில் நடந்த கூட்டத்தில் சிவில் பிரஜை ஒருவரை தாக்கியுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி ஒருவர் முழுநாடும் நாட்டு மக்களும் தமது பொறுப்பாக கருதியே செயற்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதியாக இருந்த போது மாற்றுக் கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்களை தாக்கி ஊடக நிறுவனங்களை தீ வைத்து எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளைத் தாக்கிய மஹிந்த ராஜபக்ஷ, என்று தமது கட்சி ஆதரவாளரை பகிரங்கமாக தாக்கியுள்ளார். இதன் மூலம், அவரின் சுயரூபம் தெளிவாகிறது. மஹிந்தவினால் கட்சி ஆதரவாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]