|
||
படைவீரர் புடைசூழ ஆதரவாளரை தாக்கியது மஹிந்த ராஜபக்'வுக்கு பாரிய இழுக்கு
அக்குரஸ்ஸ பஸ் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் பாரிய இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டம் நேற்று முன்தினம் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகியதுடன் அதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிற்பகல் 5.30 மணிக்கே வருகை தந்தார். துப்பாக்கிச் சூடு படாத அதி சொகுசு வாகனத்தின் கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் மத்தியில் மேடையை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆதரவாளர் ஒருவர் ஏதோ கூறியதும் ஆத்திரமடைந்து தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தள்ளிக்கொண்டு அந்த நபருக்கு அடிக்க முற்பட்டுள்ளார். அவரது தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதியை தள்ளிவிட்டு அந்த நபர் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார் |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |