|
||
கொஸ்கம பஸ் விபத்தில் 65 பேர் படுகாயம்கொழும்பு- அவிசாவளை பிரதான வீதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 65 பேர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. கொஸ்கம பொலிஸ் பிரிவில் தனியார் பஸ் ஒன்றும் இ.போ.ச. பஸ்ஸ¤ம் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த நபர்கள் சாலாவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |