அரச வாகனத்தை பயன்படுத்துவதற்கு பணம் செலுத்தினார் முன்னாள் சபாநாயகர்
அரச வாகனத்தை
பயன்படுத்துவதற்கு
பணம் செலுத்தினார்
முன்னாள் சபாநாயகர்
தமக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்கள் இரண்டை தேர்தல் நடவடிக்கை
களுக்காகப் பயன்படுத்துவதற்கான பணத்தை முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ
செலுத்தியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தின் இலங்கை வங்கி கிளையில் பணம் வைப்பி லிட்டுள்ளதாக சபாநாயகர்
அலுவலகம் நேற்று தெரிவித்தது.
வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனங்களை தேர்தல் நடவடிக் கைகளுக்காக
பயன்படுத்துவதாயின் அவற்றுக்குரிய பணம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி செயலகம்
அறிவித் திருந்தது.
இதற்கமைய முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மேற்படி பணத்தை செலுத்தியுள்ளதாக
சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.