ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 13
ஜய வருடம் புரட்டாதி மாதம் 23ம் நாள் வியாழக்கிழமை
THURSDAY, OCTOBER 09, 2014

Print

 
அரபுத் தமிழ்யுக தந்தை மாகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள்

அரபுத் தமிழ்யுக தந்தை மாகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள்

காதிரியத்துன் நபவிய்யாத் தரீக்காவின் ஸ்தாபகர் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த மனாகிப், கத்தமுல் குர்ஆன் மஜ்லிஸ் நாட்டிலுள்ள 18 பிரதேசங்களில் நேற்று 10ம் திகதி முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

பேருவளையில் பல ஆத்மிக ஞானிகள் வாழ்ந்து மக்களை தரீக்காக்களின் நேரான வழியூடாக வாழ வழி காட்டி மறைந்தார்கள்.

அந்த வரிசையில் பேருவளை நகரில் ஆதம் மரைக்காரின் புதல்வரான சங்கைக்குரிய மாகான் சேகு முஸ்தபா வலியுல்லாஹ் பிறந்தார்கள். சிறு வயதிலேயே மார்க்க விடயங்களில் ஆர்வமாகவும், நல்லொழுக்கப்பண் பாடுகளுடனும் வாழ்ந்த அன்னார் இந்த நாட்டின் சமய வரலாற்றில் ஓர் உயர்ந்த ஸ்தானத்தைப் பிடித்துக் கொண்டார்.

ஹிஜ்ரி 1301 இல் ஜமாத்துல் ஆகிர் மாதம் பிறை 27ல் அதிகாலை சுபஹ் தொழுகையை முடித்து அதே இருப்பில் பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில் இருந்த சமயம் இறை தூதர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் கனவு உத்தரவுப்படி தென் அரேபிய யெமன் நாட்டைச் சேர்ந்த சங்கைக்குரிய நாயகம் சேகு அப்துர் ரஹ்மான் இப்னு ஹஸன் இப்னு பாரி அஹ்தலி மெளலான (ரஹ்) என்ற பெரியார் புனித ஸஹீ ஹுல் புஹாரி கிரந்தத்தை சங்கைக்குரிய சேகு முஸ்தபா வலியுல்லாஹ்விடம் கையளித்து இதனை ஒவ்வொரு வருடமும் (வெள்ளிக்கிழமை தவிர) 30 நாட்கள் பராயணம் செய்து வரும்படி பணித்தார்கள்.

அன்னார் இஸ்லாமிய சட்ட திட் டங்கள் அரபு இலக்கண, இலக்கிய, பிக்ஹு சட்ட திட்டங்கள் போன்ற இஸ்லாமிய மத அறிவியல் துறையில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். இந்தியாவில் உள்ள காயல்பட்டணத்தில் இத்துறையில் அறிவு பெற்று நாடு திரும்பி பேருவளை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவை தனது தலைமை ஸ்தானமாகவும், ஆய்வு கூடமாகவும் அமைத்து இஸ் லாமிய பணிபுரியும் காலத்தில் சங்கைக்குரிய முபாரக் மெளலானா என்ற பெரியாரின் சகவாசம் கிடைத்தது.

சங்கைக்குரிய சேகு முஸ்தபா (ரஹ்) அவர்களின் சேவைக்கு இவர்கள் துணைபுரிந்து சிறிது காலத்தில் முபாரக் மெளலானா தென்னிலங்கையில் உள்ள காலி நகரில் இறையடிசேரவே தென் அரேபியா யெமன் நாட்டைச் சேர்ந்த அஹ்தலி மெளலானா அவர்க ளின் சகவாசம் கிடைத்தது. மாளிகாச் சேனை புஹாரி தக்கியாவில் புஹாரி மஜ்லிஸை ஆரம்பம் செய்யும் நல்ல பாக்கியமும் அன்னாருக்குக் கிடைத்தது.

மாகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர் கள் அறிமுகப்படுத்திய காதிரியத்துன் நபவிய்யா எனும் தரீக்கா ஆன்மிக வழி இன்று 18 இடங்களில் பின் பற்றப்பட்டு வருகிறது. பல அரபுக் கல்லூரிகளும், மத்ரஸாக்களும் சிறப்பாக இயங்குவதுடன் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளுக்கு உயிரூட்டியும் வருவது குறிப்பிடத்தக்கது.

மாகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள் மெய்ஞானியாகவும், புலவராகவும் திகழ்ந்தார். அன்னாரினால் இயற்றப்பட்ட மீஸான் மாலை அரபுத் தமிழ் கவிதை புகழ்பெற்றுள்ளது.

அன்னார் பல இஸ்லாமிய பத்வா நூல்கள், இஸ்லாமிய சட்ட திட்டங்கள், முனாஜாத்துக்கள் போன்றவற்றை அரபியிலும், அரபுத் தமிழிலும் வெளியிட்டார்கள். அஹ்காமுல் இகம் என்ற பெயரில் அரபுத் தமிழ் அச்சுக் கூட்டத்தை நிறுவி அதன் மூலம் அரபுத் தமிழில் பல ஆக்கங்களை வெளியிட்டார்.

மேலும் புனித அல்குர்ஆனின் பல அத்தியாயங்களை அரபுத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இவ்வாறு பல வகையிலும் மாபெ ரும் இஸ்லாமியத் தொண்டு புரிந்த சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள் புனி ஹஜ் கடமைக்காக மக்கா சென்றபோது மக்காவில் வபாத்தா கினார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இப் பெரியாரது ஜனாஸா கதீஜா நாயகி அவர்களின் சமாதிக்கு மேல் பக்கமாக நல்லடக்கம் செய்யப்பட்டது. அரபி அல்லாத ஒருவர் இப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டமையானது அவரின் நற் கருமங்களுக்குக் கிடைத்த பாக்கியமாகும்.

மக்கா, மதீனா போன்ற பகுதிகளில் மாகான் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்களின் சன்மார்க்க அறிவுத்திறன் பலராலும் போற்றி புகழ்ப்பட்டது. இலங்கையிலும் இப்பெரியாருக்கு பெருமதிப்பும் கண்ணியமும் வழங்கப்பட்டது.

18ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட பேருவளை மாளிகாச்சேனை புஹாரி தக்கியாவில் மர்ஹும் சேகு முஸ்தபா (ரஹ்) அவர்கள் புனித ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸை ஹிஜ்ரி 1301 முதல் ஹிஜ்ரி 1304 வரை நடாத்தினார்கள். இப்புனித மஜ்லிஸ் இன்று வரை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மாகாண சேகு முஸ்தபா (ரஹ்) அவர்களின் ஞாபகார்த்த தின மஜ்லிஸ் வைபவங்கள் நாடு முழு வதிலும் 18 ஊர்களில் நடாத்தப்படு கின்றன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]