ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
வத்துகாமம் ஸ்ரீ கண்கண்ட விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

வத்துகாமம் ஸ்ரீ கண்கண்ட விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

கண்டி, வத்துகாமம் அருள்மிகு ஸ்ரீ கண்கண்ட விநாயகர் கோயில் ஆவணி விநாயகர் சதுர்த்தி அலங்கார தேர்திருவிழா எதிர்வரும் 28.08.14 மாலை 6.00 மணிக்கு விநாயகர் வழிபாடு அனுக்ஞை வாஸ்து சாந்தி கணபதி ஹோமம், விஷேட தீபாராதனை, நடைபெற்று விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு 29.08.14 காலை 8.00 மணிக்கு பால்குட பவனி ஸ்ரீ கண்கண்ட லிங்க ராசல்ல ஆற்றிலிருந்து ஆரம்பமாகி ஸ்ரீ கண்கண்ட விநாயகர் கோயிலை வந்தடையும், காலை 9.05 மணிக்கு விக்னேஸ்வர பூஜை. புண்ணியாகவாசனம், திரலிய அபிஷேகம் அஸ்டோத்திர (108) சத சங்காபிஷேகம், தீபாராதனை நடைபெற்று அதனை தொடர்ந்து மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெறும்.

மாலை 5.01 மணிக்கு மேல் வசந்த மண்டப பூஜை நடைபெற்று எம் பெருமான் சர்வ அலங்கார பூஜியராய் அலங்கரிக்கப்பட்ட சித்திரரதத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் இசைக்க பக்தர்கள் புடைசூழ வழமையான நகர் வீதி பவனி வந்து அருள்பாலிப்பார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]