ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா கோலாகலமாக நிறைவு

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா கோலாகலமாக நிறைவு

அரச அதிபர் அதிதியாக பங்கேற்பு

கிழக்கு மாகாண விளை யாட்டுத் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட கச் சேரியும் இணைந்து நடாத் திய மாவட்ட விளையாட்டு விழா சனிக்கிழமை (23) மகிழடித்தீவு பொது விளை யாட்டு மைதானத்தில் நடை பெற்றது.

இதன்போது மரதன் ஓட் டம், உதைபந்தாட்டம், 100 மீற்றர் ஓட்டம், 1500 மீற்றர் ஓட்டம், மற்றும் அஞ்சல் ஓட்டப் போட்டிகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றன.

இவ்வருடம் மாவட்ட மட்டத்தில் அதிக புள்ளி பெற்று மண்முனை வடக்கு பிரிவு முதலிடத்தினைப் பெற்றுள் ளது.

இதன்போது வெற்றியீட்டிய வீரர்க ளுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டதுடன், மாவட்ட விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான புத்தகம் ஒன்றும் வெளி யீட்டு வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் விளையாட்டுத்துறை சார்ந் தோர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர் கள், பிரதேச செயலக உத்தியோகத் தர்கள் மற்றும் பல அதிகாரிகள், விளையாட்டு கழகங்களின் உறுப் பினர்கள், பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]