|
||
உலக கிண்ண போட்டிகள் வரை இந்திய அணியை டங்கன் பிளச்சர் வழிநடத்துவார் -டோனி
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை இந்திய அணியை டங்கன் பிளச்சர் வழிநடத்துவார் என மஹேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். டங்கன் பிளச்சரே தற்போதும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் எனவும் டோனி கூறியுள்ளார். ரவி சாஸ்திரி அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட தன் மூலம் அவரின் அதிகாரங்கள் மற்றும் பதவி நிலை குறைக்கப்படவில்லை என டோனி குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக் கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டிக்கு முன்னதாக அவர் இத னைக் கூறியுள்ளார். இதனிடையே அணியின் பணிப்பாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதை மஹேந்திர சிங் டோனி வரவேற்றுள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |