ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து துணைப் பிரதமர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து துணைப் பிரதமர் சந்திப்பு

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து நாட்டு துணை பிரதமர் நிக் கிளெக் நேற்று (25.08.2014) புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இரு நாட்டு பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உயர் அதிகாரிகளுடம் உடன் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளெக் கூறும் போது பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருளாதாரத்தை உயர்த்;துவதிலும் வேலை வாய்பை பெருக்குவதிலும் வர்த்தகத்துறையில் புதிய உத்வேக த்தை கொண்டு வருவதிலும் மிகத் தெளிவாக இருக் கிறார் என தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]