ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
Tuesday, August 12, 2014

Print

 
இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சிம்புவின் அத்தை மகன் உட்;பட 4 பேர் பலி

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சிம்புவின் அத்தை மகன் உட்;பட 4 பேர் பலி

மரக்காணம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில் இயக்குனர் டி. ராNஜந்தரின் தங்கை மகன் உட்;பட 4 பேர் பலியாகினர். இயக்குனர் டி. ராNஜந்தரின் தங்கை மகன் ஆதி குரு(22). மயிலாடுதுறையைச் சேர்ந் தவர். அவர் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தார்.

அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென் றார். நேற்று அதிகாலை தனது உறவினர்கள் பிரியதர்'pனி(29), ஓய்வு பெற்ற இராணுவ வீரர் விஜயராகவன்(52) ஆகியோருடன் டாடா இன்டிகா காரில் மயிலாடு துறையில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். காரை விஜயராகவன் செலுத்தி வந்தார்.

கார் அதிகாலை 3.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருக்கும் செட்டிக்குப்பத்தில் சென்று கொண்டி ருக்கையில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஆதிகுருவின் காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆதிகுரு, பிரியதர்'pனி, விஜயகுரு, மற்றொரு காரில் இருந்த சுரேஷ்குமார்(19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]