ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
Tuesday, August 12, 2014

Print

 
1975இல் மக்கள் திலகத்துக்கு வந்த சோதனை

1975இல் மக்கள் திலகத்துக்கு வந்த சோதனை

ghரிவள்ளல் மனிதநேய சிகரத்திற்கு ஒரு சமயம் 1975 ல் ஒரு சோதனை ஏற்பட்டது. அதாவது (அப்போது தி.மு.க அரசு) வருமானவரி பாக்கி இவ்வளவு ரூபாய் இருக்கிறது. அதை இவ்வளவு மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்று மக்கள் திலகத்துக்கு வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

இதை அறிந்த மக்கள் திலகம் மிகவும் மனம் நொந்து போனார். கடவுளை நினைத்து நான் யாருக்கும் எந்த வித துரோகமும் செய்ததில்லை, யாரிடமும் நான் கடன் வாங்கியதும் இல்லை. இப்படிப்பட்ட நான் அரசாங்கத்திடம் கடன்காரனாகிவிட்டேனே? இதைப் பற்றி மிகவும் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தார்.

பிறகு, இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அவரே ஒரு முடிவுக்கு வந்தார். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும். “சத்யா ஸ்டுடியோ” வை விற்று, இந்த அரச கடனை கட்டிவிடலாம். நான் சம்பாதித்து வாங்கிய சொத்துதானே, மேலும் இது நமக்கு இலாபகரமாக இல்லை. அதோடு சில மாதங்களாக ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும் மற்றும் கரண்டுக்கு, டெலிபோனுக்கு நிலத்துவரி.

கட்டிடவரி இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் நாம் நடித்து வாங்கும் சம்பளத்தை இந்த ஸ்டுடியோக்களுக்கு செலவு செய்ய முடியும். எனவே இதைவிற்றுவிடலாம் என்ற முடிவோடு தன்னுடைய உற்ற நண்பர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இந்த விஷயத்தை மிக உருக்கமாக சொன்னார். இதைக் கேட்ட அவருக்கு உடம்பே புல்லரித்துவிட்டது.

அவர் சிறிது நேரத்திற்கு பின் சார் இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு உஙகளை பொறுத்தவரையில் சரிதான். ஆனால் இப்போது உள்ள உங்களுடைய மதிப்புக்கு இது சரிவராது. அரசியல்வாதிகளும் பொதுமக்களும் இந்த விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிaங்க? நீங்க சினிமாவிலும், அரசியலிலும் கொடி கட்டி பறக்கிaங்க, இந்த நேரத்தில் யாரோ ஒரு வருமான வரி அதிகாரி உங்களுக்கு வரிபாக்கி இருக்கு அதை. உடனே கட்ட வேண்டும் என்று ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டார் என்பதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பது சரி இல்லை. தயவு செய்து எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடுங்கள் பிறகு அதைப்பற்றி பேசுவோம்.

இந்த விஷயத்தை நினைத்து கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டு அந்த பெரிய மனிதர் போய்விட்டார். பிறகு, அவர் வருமானவரி அதிகாரிகளை சந்தித்து எப்படி இவ்வளவு பெரியதொகை பாக்கி ஏற்பட்டது.

உங்களுடைய கணக்கு விவரம், முழுமையாக விபரம் எழுதிக் கொடுக்க நாள் கழித்து உங்களுக்கு பாக்கி இருக்கிறது? என்று இப்போ எழுதி உள்Zர்கள். இதற்கு சரியான பதில் எழுத்து வழியாக அனுப்புங்கள் என்று அவர் சென்னை வருமானவரி உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகு, அவர் மீண்டும் மக்கள் திலகத்திடம், சார் இது விஷயமாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி விட்டேன். அதாவது நியாயப்படி ஏன் இவ்வளவு காலதாமதம்? இவ்வளவு ஒரு பெரிய தொகையை கட்ட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்Zர்கள் அது தவறு. மீண்டும் கணக்கு பார்த்து சரியான பதிலை அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்து உள்ளேன்.

தயவு செய்து நீங்கள் ஸ்டுடியோவை விற்கனும் என்று நினைக்காதீர்கள்.

கடன் உங்களை விட இன்னும் பெரிய கோடீஸ்வரர் என்று சொல்பவருக்கு கூட இருக்கும் நீங்கள் கடன்காரனாக வாழக்கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. இதைக் கேட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் குறுக்கிட்டு சார் இப்போ இது வெறும் கட்டுக்கதைதான் என்று நாம் எப்படி சொல்ல முடியும் சார், என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு கடன்காரன் என்ற சொல்லைக் கேட்க கூடாது. இதுதான் என்னுடைய இலட்சியம்.

அடுத்து சார் இந்த ஸ்டூடியோவில் இருந்து எந்தவித இலாபமும் இல்லை. சமீபகாலமாக ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கும் கரண்டுக்கும். போனுக்கும் நான் என் கையில் இருந்து கொடுத்து வருகிறேன். இப்படி இருந்தால் எப்படி சார் எல்லாவற்றையும் என்னுடைய நடிப்புத் தொழிலில் இருந்துதானே சார் சமாளிக்கனும் சினிமாவைத் தவிர, வேறு எனக்கு என்ன தொழில் இருக்குது, என் உடல் உழைப்பை தவிர இந்த விஷயம் மக்கள் திலகம் அவர்களுக்கு ஒரு பெரிய சிந்தனையை உருவாக்கியது.

அது தான் 1976 ல் “சத்யா ஸ்டூடியோ” வை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக (லீசுக்கு) வாடகைக்கு கொடுத்து சிரமத்தை தீர்த்துக் கொள்ளனும் அல்லது விற்றுவிடனும், பிறகு, ஒரு மாதத்தில் எப்படியோ அந்த பெரிய மனிதர் உதவியால் அரசாங்க கடனை தீர்த்திடலாம் என்று எண்ணினார்.

மக்கள் திலகம் சத்தியா ஸ்டூடியோவை அங்கு வேலை செய்யும் சக தொழிலாளர்களையும் அழைத்து ஒரு குறிப்பிட்ட வருசத்துக்கு குறைந்த வாடகைக்கு எழுதி கொடுத்துவிட்டு ஒரு பெரிய சிக்கலில் இருந்து தப்பினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]