ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014

Print

 
தேர்தல் திணைக்களத்துக்கு உதவ இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தயார்

தேர்தல் திணைக்களத்துக்கு உதவ இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தயார்

தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் பக்கசார்பின்றி செயற்படுவது குறித்து கண்காணிக்கவும் அது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துக்கு உதவுவதற்கும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்வந்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் தேர்தல் ஆணையாளருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தேர்தல் காலத்தில் பக்கசார்பின்றி செயற்படுவது குறித்து தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் பொலிஸாருக்கும் வழிகாட்டல்கள் வழங்கியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் சட்டவிவகார செயலாளர் நிமல் ரத்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தலில் தேர்தல் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், பொலிஸார் கூட்டாக செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் தேர்தல் காலத்தில் இடம்பெறும் தேர்தலுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் மனித உரிமை ஆணைக்குழு கவனம் செலுத்தும் என்றார். தேர்தல் தினத்திலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பாகவே தமது அமைப்பு தேர்தல் பணிகளுக்கு உதவ முன்வந்ததாகவும் அவர் கூறினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]