ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 07
விஜய வருடம் தை மாதம் 26ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 08, 2014

Print

 
சாரணர் ஜம்போரியில் பங்குபற்றியவர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு

சாரணர் ஜம்போரியில் பங்குபற்றியவர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழப்பு

போதைவஸ்து பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு முகாமிலிருந்து சாரணர்களின் ஜம்போரியில் பங்குபற்ற வந்த (45 வயது) ஒருவர் நீர்த் தேக்கத்தில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று சனிக்கிழமை மாலை நுவரெலியா மொரயல்ல என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது இலங்கை சாரணர்களின் ஜம்போரி நுவரெலியா மொரயல்ல என்ற இடத்தில் நடைபெற்று வருகின்றது

இதில் பங்குகொள்ள பதுளை போதைவஸ்து பாவனையாளர் புனர் வாழ்வு முகாமிலிருந்து சிலர் அனுப்பிவைக்கப் பட்டிருந்தனர். இவர்களில் ஏ. அஜந்த (வயது 45) என்பவர் கடந்த 8 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அங்குள்ள நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]