|
||
மர்ம காய்ச்சலுக்கு 6 பேர் பலி: கடலோர கிராம மக்கள் அச்சம்நாகை அருகே, கடலோர கிராமங்களில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு ஆறு பேர் பலியாகியுள்ளனர். இதனால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாகை அருகே, கடலோர கிராமங்களான, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு பகுதிகளில் இரண்டு மாதங்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜன. 25 இல் விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்த, பெண் ஒருவர் உட்பட, ஆறுபேர், அடுத்தடுத்து இறந்துள்ளனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்ம காய்ச்சலால், கடலோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். துணை இயக்குனர் கலுசிவலிங்கம் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்று நாட்களாக மருத்துவக் குழுவினர் முகாமிட்டு, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |