ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 07
விஜய வருடம் தை மாதம் 26ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 08, 2014

Print

 
சென்னையில் 800 புதிய பஸ்கள் விரைவில் சேவையில்: அரசு போக்குவரத்து கழகம்

சென்னையில் 800 புதிய பஸ்கள் விரைவில் சேவையில்: அரசு போக்குவரத்து கழகம்

சென்னை நகர மக்களின் இன்றியமையாத தேவைகளில் பஸ் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பஸ்களில் பயணம் செய்பவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரபரப்பான நேரங்களில் பஸ்களில் நிற்க கூட இடம் இல்லாமல் கூட்டம் காணப்படுகிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தற்போது 3,637 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் புதிதாக 800 பஸ்களை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து ஆணைய சப்கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்து மேம்படுத்தப்பட்ட பகுதிகளில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தி.நகர், திருவான்மியூர், பஸ் டெப்போக்களில் பஸ் போக்குவரத்து மேம்படுத்தப்படுகிறது. 1500 பழைய பஸ்களுக்கு பதிலாக 1064 புதிய பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]