ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 04, 2014

Print

 
கணவருக்கு வழங்கிய சிறுநீரகத்தை திரும்ப கேட்கும் மனைவி

கணவருக்கு வழங்கிய சிறுநீரகத்தை திரும்ப கேட்கும் மனைவி

தன் கணவரின் நடத் தையில் சந்தேகமடைந்த லண்டன் மனைவி ஒருவர், ஆத்திரத்தில் அவருக்குத் தான் தானமாக வழங்கிய சிறுநீரகத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த ஆண்டி லேம்ப் என்ற நபர், சிறுநீரகம் பழுதடைந்ததால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவரது காதல் மனைவி சமந்தா அவருக்கு தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி ஊடகங்களில் பரபரப் பாகப் பேசப் பட்டார். ஆனால், தற்போது அவர்களது குடும்ப உறவில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கொடுத்த சிறுநீரகத்தை திருப்பிக் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி யுள்ளார்.

தனது சிறுநீரகத்தை அளித்து கணவரின் உயிரைக் காப்பாற்றிய சமந்தா மற்றும் அவரது கணவர் ஆண்டி பற்றி நிறைய ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டன. ஊடகங்களில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட காதல் ஜோடியாக இத்தம்பதி கொண்டாடப்பட்டனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]