|
||
அல் - ஹுதா முஸ்லிம் வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு
அகுரஸ்ஸ கல்வி வலயத்திலுள்ள ஹொரகொடை அல்ஹுதா முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஆறாம் திகதி பாடசாலை விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளது. பாடசாலையின் அதிபர் எம். எச். எம். நவாஸின் தலைமையில் நடைபெறவுள்ள வைபவத்தில் தேசியக் கொடியினை அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டியுடர் அபேவிக்ரம ஏற்றிவைப்பர் எனவும், பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக வீரசேகரவும், கெளரவ அதிதிகளாக தென் மாகாண தமிழ்ப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மதனியா கலீல், மாலிம்பட கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனூஷா எஸ். கங்கானமகேயும், விஷேட அதிதிகளாக முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ஜே. முகம்மது, அரபா தேசிய பாடசாலையின் அதிபர் ஜனாப் வாரிஸ் அலி மெளலானா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அதிபர் தெரிவித்தார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |