நாளொன்றுக்கு, ரூ. 20 சம்பளத்தில் நடித்தவர் அரங்கேற்றத்தில் முக்கிய வேடத்தில்
நடித்தார்.
நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300
படங்களுக்கு மேல் நடித்தவர் சுந்தரிபாய்.
சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1927 இல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம்
கொண்டவர். அப்போது எம். கே. தியாகராஜபாகவதர், நடித்த சிந்தாமணி படம் வெளிவந்து ஒரு
வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம்பெற்ற பாடல்களைப்
பாடிக்கொண்டிப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி
சங்கீதம் கற்றுத்தந்தனர்.
உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக , 1937 இல் ‘சுகுணசரசா’ என்ற
படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது
ரூபாய் சம்பளத்தில் மூன்று நாட்கள் நடித்தார்.
அதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார். இதே சமயத்தில்தான்,
கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.
ஜெமினியின் முதல் படமான ‘மன்மதமகாராஜன்’ படத்தில் கொத்தமங்கலம் சுப்புவும்,
சுந்தரிபாயும் நடித்தனர். அதைத் தொடர்ந்து காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.
இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
‘இது காதல் திருமணம் மட்டுமல்ல கலப்புத் திருமணமும் கூட. என் தாய் மொழி மராத்தி அவர்
தமிழர்
அதன்பின் ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.
1945ல் ஜெமினி தயாரித்த ‘கண்ணம்மா என் காதிலி’ என்ற படத்தில் நான் கதாநாயகியாக
நடித்தேன் வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப்
படத்தின் கதாநாயகனாக எம். கே. ராதா நடித்தார்.
இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.
1948இல் ஜெமினியின் பிரமாண்டமான படமான சந்திரலேகா வெளிவந்தது. அதில் முக்கிய
வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
கதாநாயகி டி. ஆர். ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, இச்சைக்களைத் தீர்க்கும் பச்சை
மரப்பாவையாக மாறுவேடத்தில் சென்று ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ்
பெற்றார்.
சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பவளம் 150 ரூபாய் சந்திரலேகாவில்
நடித்த போது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.
ஜெமினியின் வெற்றிப்படமான ‘சம்சாரத்தில் வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
வள்ளியின் செல்வன் படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள்
ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார்.
அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.
சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300 சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த
சுந்தரிபாய் காலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.