கொத்மலை, திறப்பனை தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்
கொத்மலை, திறப்பனை தேயிலை
தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்
(மத்திய மாகாண மேலதிக குறூப் நிருபர்)
சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் கொத்மலை
திறப்பனை தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைமைக்குள்ளாகியிருப்பதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மூடப்படுவதற்குக் காரணம், சிறு தோட்டங்களிலிருந்து வழங்கப்படும் தேயிலைக்
கொளுந்தின் அளவு குறைவாகவும் மற்றும் தேயிலைக் கொளுந்திற்கு செலுத்தப்படும் விலையும்
குறைவாக இருப்பதனாலாகும் என்று சி.தோ. உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறு தேயிலை தொழிற்சாலை மூடும் நிலைமையேற்பட்டால், அநேக தொழிலாளர்கள் வேலை
இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.