தம்புள்ள நகர அபிவிருத்திக்கு 200 கோடி ரூபா ஒதுக்கீடு
தம்புள்ள நகர அபிவிருத்திக்கு 200 கோடி ரூபா ஒதுக்கீடு
தம்புள்ள நகர அபிவிருத்திக்கு
200 கோடி ரூபா ஒதுக்கீடு
(நேகம்பஹ தினகரன் நிருபர்)
புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தம்புள்ள நகரம் பாரியளவில் நவீன முறையில்
அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பணிப்பாளர் திரு. எச். ஜீ. தயானந்த தெரிவித்துள்ளார்.
புனித பூமி அபிவிருத்திக்குப் பொறுப்பான அதிகார சபையின் பணிப்பாளர் திரு. எச். ஜீ.
தயானந்த தொடர்ந்தும் தெரிவிக்கையில்:-
பாதைகள், வைத்தியசாலை, குடிநீர் போன்றவைகளுடன் பாதைகளுடன் கான்கள் குறுக்கு வீதிகள்
போன்றவைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
மேலும் நகரிலுள்ள சகல பொது வசதிகளும் நவீன முறையிலும், கவர்ச்சிகரமான முறையிலும்
அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் இதற்கென சுமார் இருநூறு கோடி ரூபா நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.