|
||
புத்தளத்தில் பாரிய டெங்கு ஒழிப்பு விழிப்பு
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி பாரிய டெங்கு ஒழிப்பு நிகழ்வொன்று புத்தளம் நகரில்கடந்த சனியன்று (12) இடம்பெற்றது. புத்தளம் நான்காம் வட்டாரத்திலுள்ள நூர் மஸ்ஜித் பகுதியில் இந்த டெங்கு ஒழிப்பு இடம்பெற்றது. இப்பகுதியிலுள்ள நூர் இளைஞர் வட்டத்தின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவரான டாக்டர் எம். எஸ். எம். முனவ்வர் தலைமையில் அமைப்பின் பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டனர். இப்பகுதி பொது சுகாதார இன்ஸ்பெக்டர் எம். சுரேஷின் வழிகாட்டலில் நிகழ்வு இடம்பெற்றது. மலேரியா ஒழிப்பு பகுதியின் புத்தளம் கிளையின் புத்தளம் பொலிஸார் போன்றோரும் இச் சேவையில் இணைந்து கொண்டனர். உறுப்பினர்களும், தொண்டர்களும் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று டெங்கு பரவும் காணிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டுத் தலைவிகளுக்கும் டெங்கு குறித்து அறிவுரை வழங்கியதுடன் துண்டுப் பிரசுரங்களிலும் விநியோகித்தனர். ஒரு பூரணமான டெங்கு ஒழிப்பு நிகழ்வை செய்து முடித்ததாக பொதுச் சுகாதார இன்ஸ்பெக்டர் நூர் இளைஞர் வட்டத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |