750 மில்லியன் டொலர் செலவில் அனுராதபுரத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனைப்படி அனுராதபுரம் நகரத்தின் பொது வேலைகளுக்காக இந்நிதி
செலவிடப்படவுள்ளது. இதன்கீழ் அனுராதபுரம் நகரத்தில் 4000 இருக்கைகளைக் கொண்ட பாரிய
கேட்போர் கூடமொன்று அமைக்கப்படவுள்ளதோடு அனுராதபுரம் நகரத்திற்குள் பிரவேசிக்கும்
நான்கு திசைகளிலும் நான்கு வரவேற்பு நுழைவாயில்களை அமைக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது.