தேசத்துக்கு மகுடம் திட்டத்தின்கீழ் இராணுவ வீரர்களுக்கு 600 வீடுகள்
தேசத்துக்கு மகுடம் திட்டத்தின்கீழ்
இராணுவ வீரர்களுக்கு 600 வீடுகள்
(சிலாபம் தினகரன் நிருபர்)
2014 தேசத்தின் மகுடம் தேசிய கண்காட்சி வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் குருநாகல்
மாவட்டத்தின் இராணுவ வீரர்களின் வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்றது.
இந்த வேலைத் திட்டத்தின் கீழ், ரணவிரு மெளபிம செவன ரணவிர விய செபலு; ரணவிரு திரி
செவன என்ற பெயரில் மூன்று கட்டமாக வீடமைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி புத்தளம் மாவட்டத்தில் 100 வீடுகளும் குருநாகல் மாவட்டத்தில் 400 வீடுகளும்
கேகாலை மாவட்டத்தில் 100 வீடுகளும் மொத்தமாக 600 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.